இன்று மூன்றாவது தடவையாக முன்னாள் போராளிகளுக்கு விச ஊசிப் பரிசோதனை!

362 0

poison-vaccins-2வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் இன்று மூன்றாவது தடவையாக முன்னெடுக்கப்படுகின்றது.

வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் கடந்த 2 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன.

இன்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் நண்பகல் ஒரு மணிக்கும், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் காலை 8 மணிக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மாலை 4.00 மணிக்கும் வைத்திய பரிசோதனைகள் நடைபெறும் எனவும் இன்று யாழ்ப்பாண போதனா வைத்தியாசலையில் பரிசோதனைகள் இடம்பெறாதெனவும், எதிர்காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மருத்துவ பரிசோதனை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.