உகாண்டா பாராளுமன்றத்தில் 25-ம் தேதி மோடி உரையாற்றுகிறார்!

255 0

அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் உகாண்டா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி வரும் 25-ம் தேதி அந்நாட்டின் பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றுகிறார். 

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா நாட்டுக்கு வரும் 24-ம் தேதி செல்கிறார். எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார்.

வரும் 25-ம் தேதி உகாண்டா பாராளுமன்றத்தில் சிறப்புரையாற்றுவார் என துணை சபாநாயகட் ஜேக்கப் ஒவ்லன்யா குறிப்பிட்டுள்ளார்.உகாண்டா மட்டுமின்றி ருவாண்டா நாட்டிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment