படகு வெடித்ததில் ஒருவர் பலி

289 0

boatஇந்தோனேசியாவின் பாலி தீவில் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலாப்படகு ஒன்றில் வெடிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் ஜேர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் பலியானதுடன் மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

படகின் எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட மின்சார தாக்கம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின்போது 30 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் 4 படகு ஊழியர்களும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தோனேசிய கடல் போக்குவரத்து சேவையின் பாதுகாப்பு உரிய முறையில் பேணப்படாததன் காரணமாக படகு விபத்துக்கள் அதிகளவில் அங்கு இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.