பாகிஸ்தான் – பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்க தலைவர் மீது முட்டை வீச்சு

234 0

பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் மீது முட்டை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. 

பாகிஸ்தானில் பாராளுமன்றம் மற்றும் சில மாகாண சட்டசபைகளுக்கு வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. அங்குள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முட்டாஹிடா குவாமி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் மீது முட்டை வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் முட்டாஹிடா குவாமி இயக்கத்தை சேர்ந்த மூத்த தலைவர் பரூக் சத்தார் நேற்று கலந்து கொண்டார்.
பிரசாரத்தில் சத்தார் பேச ஆரம்பித்த போது அங்கு வந்த சில பெண்கள் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர் உடனே அங்கிருந்து திரும்பிச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அப்போது பரூக் சத்தார் மீது சிலர் முட்டைகளை வீசினர்.தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியின் மூத்த தலைவர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a comment