பொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு

269 0

பொசோன் தினத்தை முன்னிட்டு அனுராதபுர மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு நாளை (25) முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம், அனுராதபுர வலிசிங்க ஹரிஸ்சந்ர மகா வித்தியாலயம், மகா போதி வித்தியாலயம், மிஹிந்தலை மகா வித்தியாலயம் மற்றும் தந்திரிமலை விமலஞான வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

பொசோன் நிகழ்வுக்கான பாதுகாப்பு கடமைக்கு வருகை தரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக இந்தப் பாடசாலைகள் மூடப்படுவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளிலும் மேலும் சில பாடசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a comment