சிறுத்தையை கொலை செய்தவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

11399 10

சிறுத்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் இன்று (24) கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் இன்று (24) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சிறுத்தையை கொலை செய்த ஏனைய நபர்களையும் கைது செய்யமாறு பொலிஸாரிற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment