அரசாங்கத்தில் இருந்து விலகியதை எண்ணி கவலைப்படும் 16 பேர்- மனோ

262 0

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சின் 16 உறுப்பினர்களில் அதிகமானோருக்கு மீண்டும் பாராளுமன்றத்திற்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (23) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த 16 பேரும் அரசாங்கத்தில் இருந்து விலகியமை தொடர்பில் கவலைப்படுவதாகவும் அவர்களுக்கு ஸ்ரீலங்கா   பொதுஜன பெரமுனவின் அனைத்து வாசல்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment