காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் 27-ந் தேதி தொடக்கம்- திருநாவுக்கரசர் அறிவிப்பு

209 0

அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் 2-ம் கட்ட ஆய்வு கூட்டம் 27-ந் தேதி தொடங்கும் என்று சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற அமைப்பு தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குச்சாவடி தலைவர் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட, வட்டார, நகர, பேரூர், மாநகரங்களில் சர்க்கிள் அல்லது மண்டலம், வட்டம் அல்லது வார்டு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளோடு வாக்குச்சாவடி கமிட்டிகள் விரிவுபடுத்துதல், புது உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி வளர்ச்சி சம்பந்தமான சந்திப்பு மாவட்ட வாரியாக நடைபெற்று வருகிறது.

முதற்கட்டமாக இதுவரை 25 மாவட்டங்களில் வெற்றிகரமாக மாவட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றது.

இரண்டாம் கட்ட மாவட்ட ஆய்வுக் கூட்டங்களுக்கான சுற்றுப் பயண விவரம் அறிவிக்கப்படுகிறது. ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் தேதி, மாவட்டம், பார்வையாளர்கள் விவரம் வருமாறு:-

ஜூன் 27-ந் தேதி – காஞ்சீபுரம் வடக்கு – கே.சிரஞ்சீவி. 28-ந் தேதி – வேலூர் கிழக்கு – எஸ்.எம்.இதாயத்துல்லா. 30-ந் தேதி – திருச்சி வடக்கு – பென்னட் அந்தோணிராஜ். ஜூலை 2-ந் தேதி – கடலூர் வடக்கு – சி.டி.மெய்யப்பன். 4-ந் தேதி – கோவை மாநகர் மற்றும் திருப்பூர் வடக்கு – ஆர்.எம்.பழனிச்சாமி, எம்.ஆர்.சுந்தரம். 5-ந் தேதி – ஈரோடு தெற்கு மற்றும் திருப்பூர் தெற்கு – ஆர்.எம்.பழனிச்சாமி, எம்.ஆர்.சுந்தரம்.

7-ந் தேதி – விழுப்புரம் வடக்கு மற்றும் திருச்சி மாநகர் – எம்.கே.விஷ்ணுபிரசாத், பென்னட் அந்தோணிராஜ். 8-ந் தேதி – கரூர் மற்றும் திண்டுக்கல் மேற்கு – திருச்சி வேலுச்சாமி, வீனஸ் மணி. 10-ந் தேதி – மதுரை மாநகர் மற்றும் திண்டுக்கல் கிழக்கு – சொர்ணா சேதுராமன், அ.சந்திரசேகரன். 11-ந் தேதி – திண்டுக்கல் மாநகர் மற்றும் தேனி – அ.சந்திரசேகரன், ராம.சுப்புராம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment