ஐ.தே.க கிளைக் காரியாலயங்களை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துக

330 0

unpஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயங்களை அமைக்கும் பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.நேற்றைய தினம் பிரதமர் இந்த உத்தரவினை உத்தியோகபூர்வமாக பிறப்பித்துள்ளார்.இதன்படி கட்சியின் கிளைக் காரியாலயங்கள், இளைஞர் அணிகள், மகளிர் அணிகள் ஆகியன தொகுதி வாரியாக உருவாக்கப்பட வேண்டுமென அறிவித்துள்ளார்.

இளைஞர் சமூகத்திற்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் பதவிகளை வழங்குமாறு கோரியுள்ளார்.தொகுதி அமைப்பாளர்கள் முழு நேரப் பணியாக இதனை மேற்கொண்டு குறித்த பணிகளை பூர்த்தி செய்ய வேண்டுமென பிரதமர் கோரியுள்ளார்.