ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்வு!

330 0

சிறீலங்கா விமானப்படையிலிருந்து ஓய்வுபெற்ற எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

1981ஆம் ஆண்டு சிறீலங்கா விமானப்படையில் இணைந்துகொண்ட எயர் மார்ஷல் சுகன் புலத்சிங்கள, சிறீலங்கா விமானப்படையில் 35 வருடங்கள் சேவையாற்றி நேற்று முன்தினம் ஓய்வு பெற்றுள்ளார்.

இவர், சிறீலங்காவின் முன்னாள் அதிபர்களான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கு உலங்குவானூர்த்தி ஓட்டுநராகச் சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

slaf-farewel-2