வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடலட்டையில் ஈடுபட்ட மூன்று படகுகள் மடக்கிப் பிடிப்பு!!

334 0

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட தென்பகுதி மீனவர்களின் மூன்று படகுகள் பிடிக்கப்பட்டு மீன்பிடி நீரியல் வள திணைக்களத்தினுடாக நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.வடமாட்சி கிழக்கு கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நேரத்தில் கடலட்டை பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கன படகுகள் ஈடுபட்டன. அவற்றில் 3 படகுகள் முன் எச்சரிக்கையாக கட்டைக்காட்டு மக்களுடன் இணைந்து நள்ளிரவு 11 மணியளவில் பிடிக்கப்பட்டு, நேற்று காலை 10மணியளவில் மீன்பிடி நீரியல் வள திணைக்கள அதிகாரிகளூடாக நீதி மன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையில் கட்டைக்காடு மக்களுடன் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான சுகிர்தன்,சயந்தன் , மற்றும் பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை தலைவர் உட்பட்டோரும் பங்குபற்றினர்.

Leave a comment