செய்யூரில் 2-வது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கிராமங்களின் வரைபடங்களை தமிழக அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில் தற்போது சர்வதேச விமான நிலையம் 1,300 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு 2 வது ஓடுதளம் அமைக்கப்பட்டபோதும், தேவையான இடவசதி இலக்கு எட்டப்படவில்லை. விமான சேவைகள் அதிகரிப்பு, சரக்குகளை கையாளும் வசதி போன்றவற்றுக்காக புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டிய அவசியம் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான நிலையத்துக்கான இடம் தொடர்பாக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் மாலதி கூறும்போது, “இந்த இடத்தில் விமானம் நிலையம் அமைவது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பான கருத்துரு எதுவும் அனுப்பப்படவில்லை. கிராமங்களின் வரைப்படங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. எதற்காக வரைப்படங்கள் கொடுக்கப்பட்டது என் றும் தெரியவில்லை” என்றார்.