காணாமல் போன வர்த்தகர் சிறையில்

566 0

jail-720x480கடந்த வாரம் மருதானைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் காணாமல் போன வர்த்தகர் சிறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

41 வயதான குறித்த வர்த்தகர் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியைச் சேர்ந்த குறித்த நபர் வெளிநாடு செல்வதற்காக கொழும்பு வந்து தங்கியிருந்ததாக இவரது சகோதரர் மருதானை பொலிஸில் முறைபாடு செய்திருந்தார்.

எனினும் குறித்த நபர் தங்கியிருந்த விடுதிக்கு அண்மையில் உள்ள பாடசாலைக்கு அருகில் வைத்து துஸ்பிரயோகம் சம்பந்தமாக கைது செய்திருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.