மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

233 0

பொகவந்தலாவ கிலானிதோட்டபகுதியில் சட்டவிரோதமாக  மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு பேரை பொகவந்தலாவ பொலிஸார் இன்று கைது செய்யபட்டுள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின்போதே இந்து கைது இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது கைது செய்யபட்டவர்களிடம் இருந்து மாணிக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைது செய்யபட்ட இரண்டு சந்தேகநபர்களும் கிலானிதோட்டபகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யபட்ட சந்தேக நபர்கள் நாளை .திங்கட்கிழமை ஹட்டன் நீதவான் நிதிமனிறில் ஆஜர்படுத்தபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேலை பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர்களிடம் இருந்து பொதிசெய்யபட்டு வைக்கபட்டிருந்த மாணிக்ககல் இள்ளவகைகளை கொண்ட 09 பைகளையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தப்பிசென்றுள்ளதாகவும் தப்பிசென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a comment