யாழ்., கிளிநொச்சி செல்கின்றது காணாமல்போனோர் பணியகம்!

333 0

காணாமல்போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் அடுத்த மாதம் 13, 14ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு களப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

காணாமல்போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும், சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்காகவுமே இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணியக உறுப்பினர்கள் கடந்த மாதம் 12ஆம் திகதி மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முதலாவது கலந்துரையாடலை நடத்தினர். அதன்பின்னர் மாத்தறை, திருமலை ஆகிய மாவட்டங்களிலும் அமர்வுகள் நடத்தப்பட்ட நிலையிலேயே 4ஆம், 5ஆம் கட்ட அமர்வுகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளன.

இதுவரை இடம்பெற்ற அமர்வுகளின்போது பெறப்பட்ட தகவல்களையும், சாட்சியங்களையும் பணியக உறுப்பினர்கள் ஆவணப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை, அமைக்கப்படவுள்ள 12 பிராந்திய அலுவலகங்களில் 8 அலுவலகங்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தியே நிறுவப்படவுள்ளன. அதில் முதலாவது அலுவலகம் இன்னும் இரண்டு மாதங்களில் வன்னியில் அமையவுள்ளது.

Leave a comment