அம்மா முழு உடல் பரிசோதனை மையம்- எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்

382 0

சென்னை அரசு பன்னோக்கு ஆஸ்பத்திரியில் அதிநவீன முறையில் அமைக்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். 

தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன முறையில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a comment