சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் அவசியம் – பரணகம

543 0

maxwel-720x400காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பரணகம ஆணைக்குழு, தமது அறிக்கையில் சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்பு குறித்து திட்டவட்டமாக பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் இந்த ஆணைக்குழு தமது அறிக்கையை கையளித்திருந்தது.

இதில் உள்ளக பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் இணைக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

எனினும் பல்வேறு விடயங்களில் சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்களின் உதவிகள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளக பொறிமுறையின் இருதயமாக, உண்மையைக் கண்டறிந்து நல்லிணக்கம் செய்யும் ஆணைக்குழு அமைய வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.