கிளிநொச்சியின் பல இடங்களில் நடைபெற்றுவரும் தெருக்கூத்து!

299 0

கிளிநொச்சியின் பல இடங்களில் விழிப்புணர்வு தெருக்கூத்து இடம்பெற்று வருவதாக எமது  செய்தியாளர் கூறுகின்றார்.

அதன்படி கிளிநொச்சி நகரத்திலும் கிராமங்களிலும் பொது இடங்கள் மற்றும் வீதி ஓரங்களிலும் தமிழ் இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கலாலய நாடக குழுவினரின் நெறியாழ்கையில் “அக விழி திறப்போம்” எனும் தொனிப் பொருளில் “போதை தந்த பரிசு” எனும் விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்று வருகிறது.

இந்த நாடக நிகழ்வுகளைக் கண்டுகளிப்பதற்காக அலை அலையாக மக்கள் திரண்டு வருவதுடன் போதைப் பொருள் பாவனை, குடும்ப வன்முறை, பாலியல் துஸ்பிரயோகம், மற்றும் தற்போது உள்ள சூழ்நிலைக்கேற்ப விழிப்புணர்வு நாடகங்களை நெறிப்படுத்தி செய்வதற்கு தமது ஆதரவுகளை தருவதாக மக்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து தமிழ் இளைஞர் பேரவையின் ஆய்வுத்துறை பொறுப்பாளர் ச.கீதன் தமது அமைப்பினால் நடாத்தி வருகின்ற விழிப்புணர்வு வீதி நாடகங்களை குழப்பும் நோக்குடன் சிலர் செயற்பட்டு வருவதால் பல நெருக்கடிகளின் மத்தியில் தமது அமைப்பு சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக குறிப்பிட்டார்.

ஈழத் தமிழர்களது கல வடிவங்களில் தெருக்கூத்து நாடகங்கள் மிக முக்கியமான விழிப்புணர்வு ஆற்றுகைகளாக கடங்த காலங்களில் இருந்துவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment