தமிழக மீனவர்களின் பிரச்சினையை மூடிமறைக்க ஜெயலலிதா முயற்சி – கருணாநிதி குற்றச்சாட்டு

562 0

wp-1461944813494தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் முகங்கொடுக்கின்ற நாளாந்த பிரச்சினைகளை மூடி மறைக்க தமிழக முதல்வர் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையிலேயே ஜெயலலிதாக கச்சத்தீவு பிரச்சினையை முன்கொண்டு செல்வதாகவும் கருணாநிதி குற்றம் சுமத்தியுள்ளார்.
கச்சதீவை மீட்கமுடியாமல் இருப்பதற்கு கருணாநிதியின் எதிர்ப்பே காரணம் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து ஜெயலலிதா முன்வைத்து வருகிறார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை அவர் எழுப்பும் போதெல்லாம் அதற்கு தக்க பதிலை தாம் வழங்கி இருப்பதாக கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தொடர்ந்தும் அவர் இந்த பிரச்சினையை எழுப்பி வருகின்றமைக்கான காரணம், தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாதுள்ளமை குறித்த மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதே ஆகும் என்றும் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment