வழங்கிய 7000 ரூபா பணத்தை திரும்ப கேட்கும் தவராசா

233 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் செலுத்திய 7 ஆயிரம் ரூபாவை தனக்கு மீள வழங்குமாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

மே -18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்லைிக்கான ஏற்பாட்டுச் செலவுகளின் பொருட்டு வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 38 பேரில் 33 பேரிடம் இருந்து தலா 7 ஆயிரம் ரூபா பெறப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த நினைவு நிகழ்வை வடக்கு மாகாண சபை செய்யவில்லை என்பத​னால் சம்மதம் தெரிவிக்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா பணத்தை தனக்கு மாகாண சபை மீள வழங்க வேண்டும் என சி.தவராசா சபையின் அவைத் தலைவருக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு 2016ம் ஆண்டு முதல் வடக்கு மாகாண சபை முன்னெடுத்துவரும் நிலையில் இந்த ஆண்டு பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்ட நிலையில் பல சர்ச்சைகள் வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment