யாழ் அரியாலையில் இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

203 0

சுப்பிரமணியம் வீதி, அரியாலைப் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய குறித்த நபர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியையும் பிள்ளைகளையும் பிரிந்து தாயாருடன் வசித்து வந்துள்ளார். இன்று அவரது தாயார் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றபோதே அவர் வீட்டினுள் அறையை பூட்டி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு இறந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிங்கராசா கமலேஸ்வரன் ஆவார். இவரது இறப்பு தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment