யாழ் – புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள்

544 0

12440324யாழ்ப்பாணம் புலோலி புற்றாளை மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு நிகழ்வுகள், நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுகிழமை வரை இடம்பெறவுள்ளன.
1916ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையின் நூற்றாண்டு நிகழ்வின்போது புதிய நிர்வாகத்தொகுதி, திறந்தவெளி கலையரங்கம் ஆகியவற்றின் அங்குரார்பணங்களும் அஞ்சல் தலை வெளியீடும் இடம்பெறுவதாக பாடசாலையின் அதிபர் ஆ.சிவநாதன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிகழ்வின் இறுதிநாளான நாளை கல்வி ராஜாங்க அமைச்சர் வீ ராதாகிருஸ்ணன் பிரதமஅதிதியாக பங்கேற்கவிருக்கிறார்.

Leave a comment