காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும்- முதலமைச்சர் நம்பிக்கை

414 0

காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என்று ஊட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊட்டியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊட்டியில் இன்று மலர் கண்காட்சியை தொடங்கி வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. முடிவுற்ற பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது.

காவிரி பிரச்சனையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சி முதல் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆட்சி வரை பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment