இசைப்பிரியாவின் தாய் கண்ணீருடன் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

262 0

இசைப்பிரியாவுக்கு ஏற்பட்ட அநீதி முழு உலக நாடுகளுமே அறியும். இந்நிலையில், இசைப்பிரியா குறித்த திரைப்படத்தை வெளியிடவேண்டாம் என இசைப்பிரியாவின் தாய் வேதரஞ்சனி தெரிவித்துள்ளார்.

“இசைப்பிரியாவின் பிரச்சினை முழு உலகத்திற்கும் தெரியும். அதை மீண்டும் படம் போட்டு காட்டி விமர்சிக்க வேண்டிய தேவை கிடையாது. இவ்வாறான செயற்பாட்டின் மூலம் எனது மகள் அவமானப்படுத்தப்படுகின்றார்.

இசைப்பிரியாவுக்கு நடந்தவற்றையே எங்களால் இன்னும் மறக்க முடியவில்லை. இந்நிலையில், படத்தை திரையிடப்போவதாக கூறி எங்களை வேதனைப்படுத்த வேண்டாம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment