ஜே.வி.பி ஒருநாளும் தீவிரவாத அமைப்பாக செயற்பட்டதில்லை – விஜித ஹேரத்

399 0

மக்கள் விடுதலை முன்னணி எந்த காலத்திலும் தீவிரவாத அமைப்பாக செயற்பட்டதில்லை என, அதன் பிரசார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால செயற்பாடுகள், தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்புக்கு ஒத்ததாக காணப்பட்டதாக, நேற்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து, அமைச்சர் ராஜித்த சேனாரத்தான தெரிவித்திருந்தார்.

அவரது இந்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே, விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமைச்சர் ராஜித சேனாரத்ன கடந்த காலங்களில், சட்டவிரோத அமைப்புக்களை வழிநடத்தியவர் எனவும் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a comment