‘வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்’ யாழ்ப்பாணத்தில் போராட்டம்

9936 0

“வன்முறை தவிர்ப்போம், போதை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாநகரசபையின் மேயர் ஆர்னோல்ட், வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, “வன்முறையை ஒழிப்போம், இளைஞரை வளர்ப்போம், சமூக சீரழிவை ஒழிப்போம், நற் சமுதாயத்தை உருவாக்குவோம்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தை வடகிழக்கு சமூக நல்லிணக்கத்திற்கான அமைப்பு முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment