யாழ் மாநகர சபை முதல்வரை உடனடியாக பதவியில் இருந்து நீக்குங்கள்-மணிவண்ணன் (காணொளி)

11051 0

மாநகர சபையில் குழுக்கள் நியமிக்கப்படாது, முதல்வர் தனது அதிகாரத்துக்கு புறம்பாக செயற்பட்டமைக்கு உள்ளுராட்சி அமைச்சர் என்ற ரீதியில் வடக்குமாகாண முதலமைச்சர் உடனடி நடவடிக்கையாக பதவி நீக்கத்தை சட்டத்தின் பிரகாரம் மேற்கொள்ளுதலே, சபையின் எதிர்கால நடவடிக்கைக்கு ஆரோக்கியமானது என விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வரின் பதவித்துஷ்பிரயோகம் தொடர்பில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் சட்டம் நன்கு தெரிந்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் இருப்பதால், சட்டம் தொடர்பான விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தவறாக மேற்கொள்ளமாட்டார்கள். எனவே தற்போது யாழ்.மாநகர சபையில் இடம்பெற்ற பதவித் துஸ்பிரயோகத்திற்கு வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சரும், முதலமைச்சரமாக சீ.வி விக்னேஸ்வரன் தகுந்த நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

Leave a comment