கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மே தினப் பேரணி

226 0

கிளிநொச்சி மாவட்டத்தில்  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மே நாள் நிகழ்வுகள் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் பல்வேறு பொதுஅமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.

தமிழ்த்  தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக்கிளையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட மே தின நிகழ்வுகள் இன்று  கிளிநொச்சி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வின் முன்னதாக நாச்சிக்குடா சந்தியிலிருந்து தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சித்தரிக்கின்ற ஊர்திகளுடன் கூடிய பேரணியாக முழங்காவில் விநாயாகர் விளையாட்டுக்கழக மைதானத்தைச்சென்றடைந்து அங்கு மே நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

நிகழ்வில் கடற்தொழில் சங்கங்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் கூட்டுறவுச்சங்கங்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தமிழ்த்  தேசியக்கூட்டமைப்பினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சாள்ஸ்நிர்மல நாதன் சாந்திசிறிஸ்கந்தராஜா சரவனபவன் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, மற்றும் பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி, ஆகிய பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment