முள்ளிவாய்க்காலில் சிரமதானப் பணிகள்!

242 0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  மே 18 திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று சிரமதானப் பணிகள் இடம்பெற்றன. இன்று முற்பகல் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சிரமதானப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

2009 ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த பொதுமக்களுக்காக முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த சிரமதானப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

 

Leave a comment