தானும் விஷம் அருந்தி இரு பிள்ளைகளுக்கும் கொடுத்த தந்தை

252 0

தந்தையொருவர் தனது இரு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய சம்பவம் சாவகச்சேரி -மீசாலை பகுதியில்  நேற்று இடம்பெற்றுள்ளது.

35 வயதான தந்தை, தனது 10 வயது மகனுக்கும் 7 வயதான மகளுக்கும் விஷம் கொடுத்து அவரும் அருந்தியுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

விஷம் அருந்திய மூவரும் கவலைக்கிடமான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  சாவகச்சேரி  பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment