விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி மின் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

269 0

கொழும்பு பிரதேசத்தில் விநியோகிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை போலி மின் உபகரணங்களை நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியுள்ளது.

இந்த மின் உபகரணங்கள் எஸ்.எல்.எஸ் வர்த்தக தர சான்றிதழ் இன்றி வேறு பெயரில் விற்பனை செய்வதற்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது

Leave a comment