பிரதமரின் பொருளாதார குழு இரத்து செய்யப்படவில்லை – மங்கள

264 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான பொருளாதார குழு இரத்து செய்யப்படவில்லை என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நித்தியமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதார குழு இரத்து செய்யப்படவில்லை அது இன்னும் அவ்வாறே இருக்கின்றது. குறித்த குழு தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பாத்திரம் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டது. பிரதமரின் பொருளாதார குழு அவ்வாறே இருக்கின்றது. ஜனாதிபதியின் பொருளாதார குழுவினால் கொள்கை ரீதியான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. குறித்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் பொருளாதார குழு தீர்மானம் மேற்கொள்கிறது. மீண்டும் அமைச்சரவைக்கு முன்வைக்கப்படுகின்றன என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Leave a comment