வலி வடக்கிலும் கூட்டமைப்பிற்கு கரம் கொடுத்தது ஈபிடிபி!! யானையுடன் கையும் சேர்ந்து கரம் கொடுக்க ஆட்சியைப் பிடித்தது கூட்டமைப்பு!!

351 0

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னிறுத்திய சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை நடந்த சபையின் முதல் அமர்வில், தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சோ.சுகிர்தனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தாயுமானவன் நிகேதனும் தவிசாளர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டனர்.

இதையடுத்து, பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சோ.சுகிர்தனுக்கு 20 வாக்குகளும், தா.நிகேதனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன.ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி,  ஐக்கிய தேசியக்கட்சி என்பன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரை ஆதரித்தன.ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் ஒருவர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலை வகித்தது.

இதையயடுத்து, உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பொன்னம்பலம் இராஜேந்திரம் தெரிவு செய்யப்பட்டார்.வலி.வடக்கு பிரதேச சபையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 17 ஆசனங்களையும், ஈபிடிபி 8 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி,  மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 2 ஆசனங்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment