கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து உறுப்பினர்களும் மக்கள் நலனுக்காக செயற்பட முன்வரவேண்டும் – இமானுவேல் ஆனோல்ட்(காணொளி)

411 0

யாழ்ப்பாண மாநகரசபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் நலனுக்காக செயற்பட முன்வரவேண்டும் என்று யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அழைப்பு விடுத்துள்ளார்.

மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டு நகரத்தின் மேம்பாட்டிற்கு ஒத்துழைக்கும் வகையில் தனது தலைமைத்துவம் அமையும் எனவும் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு  குறிப்பிட்டார்.

Leave a comment