தற்போதைய நிலையில் ஆட்சியமைக்க ஸ்ரீ ல.சு.க. இன்றி முடியாது- ஜனாதிபதி

264 0

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உதவியின்றி ஆட்சியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பிடுகின்ற இந்த உண்மை வெளிப்படையானது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்தில் தெளிவான வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.

பொலன்நறுவை மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு நேற்று (26) பொலன்நறுவை ரோயல் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment