வவுனியாவில், இடி மின்னல் காரணமாக, கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீப்பற்றியுள்ளது(காணொளி)

9484 0

வவுனியாவில், இடி மின்னல் காரணமாக, கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று தீப்பற்றி சேதமடைந்துள்ளது.

இன்று மாலை 4.30 மணிக்கு பெய்த, இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக, வவுனியா – மன்னார் வீதியில் அமைந்துள்ள, நாற்சதுர சுபிசேச சபை தேவாலயத்தில், இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற மின்சார சபையினர், மின்சாரத்தை துண்டித்ததுடன், வவுனியா நகர சபை தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் பாரிய அனர்த்தம் தவிக்கப்பட்டுள்ளது.

கடும் காற்றுடன், மழை பெய்து வருவதனால், காற்றின் காரணமாக கூரைத்தகரம் பறந்து சென்று, உயர் அழுத்த மின் கம்பியில் மோதிய நிலையில், வவுனியாவில் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment