உலக தீவிரவாத அமைப்புக்களினால் இலங்கை முஸ்லிம்களை மாற்ற முடியாது- அமைச்சர் பைஸர்

335 0

தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழிவிடப்போவதில்லை  என மல்வத்து மகாநாயக்க தேரரிடம் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் என்ற பிரிவினையை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (16) மல்வத்து மஹநாயக்க தேரரை சந்திக்கச் சென்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகாலங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் இருந்ததால் நாட்டில் உள்ள மக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a comment