நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பம் – பிரதமர் செயலகம்

274 0

கண்டியில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் அறிவித்துள்ளது.

சேதமடைந்த கட்டிடங்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் செயலகம் தெரிவித்துள்ளது. சமய ஸ்தானங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

நாளைய தினம் நஷ்டஈடு வழங்கும் நடமாடும் சேவையொன்று இடம்பெறவுள்ளதாகவும் பிரதமர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கை மிக குறுகிய காலத்துக்குள் முன்னெடுக்கப்படும் எனவும் செயலகம் அறிவித்துள்ளது.

Leave a comment