மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணலை ட்ரக்டரில் எடுத்துச் சென்ற ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதுடன் ட்ரக்டரையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் வீதிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் ஆற்று மணலை எடுத்தச் சென்ற ட்ரக்டரை வழி மறித்து சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இல்லாது சட்டவிரோதமாக ஆற்று மணலை எடுத்துச் செல்வது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்ததோடு ஆற்று மணல் கடத்திய ட்ரக்டரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.