ஏரிஎம் இயந்திரம் மீது விஷமிகள் தாக்குதல்!! பலாலி வீதியில் தொடரும் அக்கிரமம்!

260 0

யாழ் உரும்பிராய் பிரதேசத்தில் உள்ள இலங்கை வங்கியின் ஏரி.எம் .இயந்திரத்தின் கண்ணாடிகள் இனந்தெரியாதோரால் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு இந்சத் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 மணி நேரமும் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ள பலாலி வீதியில் அடிக்கடி இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து பலாலி வீதி உரும்பிராய் சந்திக்கு அண்மித்துள்ளதாக அமைந்திருந்த நடமாடும் எணவு விற்பனை வாகனத்தின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன. இதனால் வாகனத்தின் உரிமையாளருக்கு பல ஆயிரம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக யாழில் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

Leave a comment