உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் புதன் கிழமை நடைபெறவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகள் எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து செயற்படவுள்ளன. அதற்கு முன்னதாக உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவேண்டும்.
அதற்கு அமைவாக நாளை மறுதினம் புதன்கிழமை, யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பில் இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.