ராகுல்காந்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

241 0

ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார், இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறி இருக்கிறார். இலங்கையில் 1½ லட்சம் தமிழர்களை கொன்று குவித்தபோது தமிழர் இனத்தையே மொத்தமாக இலங்கையில் அழிப்பதற்கு காரணமாக அன்றைக்கு இருந்தது காங்கிரஸ் அரசும், அதன் கூட்டணியான தி.மு.க. ஆட்சியும்தான். இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டதற்கு அவர்கள்தான் காரணம்.

எனவே ஒட்டுமொத்தமாக ஈழத் தமிழர்களை அழித்து விட்டு இப்போது அதை பெருந்தன்மை என்று சொல்கிறார் என்றால் இது எப்படி இருக்கிறது என்று நினைத்து பாருங்கள்.

ராகுல் கூறுவதை கமல் ஆதரிக்கிறார் என்றால் தமிழர்களை படுகொலை செய்த தி.மு.க.வை பெருந்தன்மை என்கிறாரா? அல்லது காங்கிரசை பெருந்தன்மை என்கிறாரா? இதை நியாயப்படுத்துகிறாரா?

கேள்வி:- ராகுல் இதை அரசியல் பண்ணுவதாக கருதுகிறீர்களா?

பதில்:- எல்லோரையும் அழித்து விட்ட பிறகு அவர் சொல்வதை பார்க்கும்போது அரசியலுக்காகத்தான் சொல்கிறார். வேறு எதற்காக சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment