புதையல் தோண்டிய 6 பேர் கைது

238 0

கிறிஉள்ள கல்ஹேன்கந்த பிரதேசத்தில் நபர் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளியாபிட்டிய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் கிறியுள்ள, புத்தளம், தெனியாய, நவகமுவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment