அமெரிக்க குடியுரிமை பெற்றவரான துரைசிங்கம் இரத்தினம் கிளிநொச்சியில் அடித்துக்கொலை!

11265 106

கிளிநொச்சியில் நேற்று இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான துரைசிங்கம் இரத்தினம் துரைசிங்கம் என்ற 71 வயதுடையவரே கொலை செய்யப்பட்டவரார். கிளிநொச்சி செல்வ நகரில் அவரது காணியை பார்வையிட சென்ற போதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது பிள்ளைகள் கனடாவில் வசிப்பதாக தெரியவருகிறது.

Leave a comment