நாடளாவிய ரீதியில் முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் இடைநிறுத்தம்

214 0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்த தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க நாடளாவிய ரீதியில் இந்த நடைமுறையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment