பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூடுகிறது

200 0

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின் கீழுள்ள ஒர் ஒழுங்கு விதி இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பாரிய லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையின் தமிழ் மொழி மூல பிரதி காணப்படாததனால் நேற்று (20) பாராளுமன்றத்தில் ஏற்பட்ட சர்ச்சையினால் அது தொடர்பான விவாதம் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதுடன், பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூடும் என சபாநாயகர் நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment