தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைத்திறன் போட்டிகள் – 2018

30898 0

தமிழ்க் கல்விக் கழகத்தின் வளர்ச்சிப்படிகளில் ஒன்றாகச் சென்ற ஆண்டு ஆரம்பமாகிய கலைத்திறன் போட்டிகள் தமிழலயங்களின் பெற்றோர் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

அந்த அடிப்படையில் 2018 இவ்வாண்டுக்கான போட்டிகள் சென்ற 03.02.2018 சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ளன. மாநிலப் போட்டிகளின் வரிசையில் தென் மாநிலத்துக்கான போட்டிகள் சிண்டெல்பிங்கன் நகரில் மிகவும் சிறப்பாகவும் சென்ற ஆண்டைவிட எழுச்சியாகவும் நிகழ்ந்தேறியது. அதன் தொடர்ச்சியாக 04.02.2018 தென்மேற்கு மாநிலத்தில் கடும்போட்டிகள் நிலவின.
10.02.2018 சனிக்கிழமை மத்திய மாநிலத்தில் கிரிபேல்ட் நகரிலும், 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய மாநிலத்தின் வூப்பொற்றால் நகரிலும் 17.02.2018 சனிக்கிழமை கனோவர் வடமாநிலத்திலும் போட்டிகள் பெற்றுள்ளது.

ஐந்து மாநிலப் போட்டிகளிலும் முதலாம் நிலையில் வெற்றி பெற்ற போட்டியாளர்கள் அல்லது போட்டிக் குழுக்களைத் தெரிவுசெய்து கற்றிங்கன் நகரில் எதிர்வரும் 03.03.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்கான ஒழுங்குகள் நடைபெறுவதாக தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப்பிரிவினர் அறியத்தருகின்றார்கள்.

Leave a comment