பத்திரிகையில் பணியாற்றிய பக்க வடிவமைப்பாளர் அகால மரணம்!

353 0

நெருக்கடியான காலப்பகுதியில் யாழ்.தினக்குரல் பத்திரிகையில் பணியாற்றிய பக்க வடிவமைப்பாளர்களுள் ஒருவரான இதயராஜா   மரணித்துள்ளார்.

கொக்குவில் மேற்கு மஞ்சவனப்பதியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகப்பணியாளரான ஜோகேஸ்வரராஜா இதயராஜா (ராஜன்) நேற்று திங்கட்கிழமை அகாலமரணமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 2001 உயர்தர கணிதப்பிரிவு மாணவனான ராஜன் யாழ்
பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தில் ஊடகக் கல்வி பயின்றவர்.

அவர் வலம்புரி, கொழும்பு தினக்குரல், உதயன், யாழ் தினக்குரல் ஆகிய ஊடகங்களில் பக்கவடிவமைப்பாளராக பணியாற்றியிருந்தார். தற்போதும் யாழ் தினக்குரலில் பணியாற்றிக்கொண்டிருந்த அவரது பணிக்காலம் கூடிய அளவில் யாழ்.தினக்குரலில் கடந்திருந்தது.

 

Leave a comment