சிவராத்திரி தினம் – மன்னாரிலுள்ள பல இந்து ஆலயங்களில் சிலைகள் உடைப்பு

333 0

இந்துக்கள் சிவராத்திரி தினத்தினை நேற்றையதினம் கடைப்பிடிக்கவிருந்த நிலையில் இன்று அதிகாலை மன்னாரிலுள்ள ஆலயங்களில் வைக்கப்பட்டுருந்த சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று சிலைகள் திருடி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியிலுள்ள லிங்கேஸ்வர ஆலயத்தில் இருந்த மூன்று சிலைகள் திருடப்பட்டுள்ளதுடன், மன்னார் தாழ்வுப்பாடு பிரதான வீதியில் கீரி சந்தியில் இருந்த ஆலையடிப் பிள்ளையார் ஆலய பிள்ளையார் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

மன்னார் தள்ளாடி விமான ஓடு பாதைக்கு அருகில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயம் இதற்கு முன்னர் பல தடவைகள் இனம் தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்ட போதும் , அப்பகுதி மக்கள் சேதமடைந்த ஆலயத்தை புனரமைத்து வழிபட்டு வந்தனர். அந்நிலையில் குறித்த ஆலயத்தில் இருந்த பிள்ளையார் சிலை திருடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர்; விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment