இந்தத் தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பின்னடைவே!-சுமந்திரன்

323 0

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பெற்றுக் கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கிடைத்த வாக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளது. இது ஒரு பின்னடைவு எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது;

யாழ்ப்பாணத்திலுள் 17 சபைகளில் 13 சபைகளில் அதிகளவு ஆசனங்களை கைப்பற்றியுள்ளோம்.யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணங்கள் தொடர்பில் கூட்டமைப்பு விரைவில் ஆராயும். அதற்கான காரணங்களை கண்டறிந்து களைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a comment